Thursday, October 15, 2015
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசினார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பதவியேற்பு விழா உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உடுமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கும், ரயில் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும் பொள்ளாச்சி வ.ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுகவின் 44-ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசியது:அதிமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் துறை வாரியாக பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய திட்டங்களை உருவாக்குவதிலும் அதை நிறைவேற்றுவதிலும், சட்டப்போரட்டத்தின் மூலம் மாநில உரிமைகளை மீட்பதிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிகர் யாருமில்லை. பாமர மக்கள் முதல் படித்த இளைஞர்கள் வரை அதிமுக அரசை ஆதரித்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது போலவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.
இதைத்தொடர்ந்து அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆறுச்சாமி (உடுமலை மேற்கு), ஆர்.ஜி.ஜெகநாதன்(உடுமலை கிழக்கு), மெட்ராத்தி நா.அண்ணாத்துரை (மடத்துக்குளம்), நகரச் செயலாளர் கே.ஜி.சண்முகம் (உடுமலை) உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment