Thursday, November 26, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கோரம்பள்ளம், புதுக்கோட்டை, அய்யனடைப்பு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் 24.11.2015 அன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
நேற்று (25.11.2015) மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால், முதியவர்களுக்கு ரொட்டி மற்றும் போர்வைகளை வழங்கினார். முதலில் ஸ்பிக் நகர் ஞான மகாலில் தங்கியுள்ள 800 நபர்டகளுக்கு பொட்டலங்களை வழங்கினார். தொடர்ந்து முத்தையாபுரம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் தங்கியுள்ள மக்களுக்கு பொட்டலங்களை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து மதிகெட்டான் ஒடையில் செல்லும் உபரி நீரை சென்று பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், வெள்ள நிவாரண சிறப்பு அலுவலர் குமார் ஜயந்த், மாநகராட்சி மேயர் அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...

0 comments:
Post a Comment