Thursday, November 26, 2015
தூத்துக்குடி துறைமுகம் வழியாக செம்மர கட்டைகள் கடத்தப்பட்டது எப்படி? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக நாள்தோறும் ஏராளமான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் கடந்த அக்டோபர் மாதம் 14-ந்தேதி பருத்தி ஆடைகள் என்ற பெயரில் கண்டெய்னர்களில் பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட பார்சல்களில் செம்மர கட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து இந்த கட்டைகளை பிடிக்க கொச்சி, குஜராத் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களுக்கு தகவல் கொடுத்து முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்குள் செம்மர கட்டைகள் துபாய் நாட்டில் உள்ள ஜெபலலி என்ற துறைமுகத்துக்கு போய்ச்சேர்ந்தது. பின்னர் அந்த துறைமுகத்துக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்து செம்மர கட்டைகளை தூத்துக்குடி துறைமுகத்துக்கு மீண்டும் வரவழைத்தனர். அவை நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. அந்த பார்சல்களை பரிசோதனை செய்த போது, உள்ளே ரூ.2¼ கோடி மதிப்புள்ள 7 டன் செம்மர கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக செம்மர கட்டைகள் தப்பியது எப்படி? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி துறைமுகத்தில் மொபல் ஸ்கேனர் வசதி உள்ளது. மேலும் புதிதாக பெரிய ஸ்கேனர் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மொபல் ஸ்கேனர் மூலம் இறக்குமதி செய்து நமது நாட்டுக்குள் கொண்டு வரப்படும் பொருட்களை மட்டுமே சுங்கத்துறை பரிசோதனை செய்வார்களாம். அதுவும் சந்தேகப்படும் பார்சல்களையும், குறிப்பிட்ட பார்சல்கள், கண்டெய்னர்களை மட்டுமே சோதனை செய்வார்கள். ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஸ்கேன் செய்யப்படாதாம். எனவே பருத்தி ஆடை என்ற உடன் அதிகாரிகள், அவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment