Thursday, November 26, 2015
தூத்துக்குடி துறைமுகம் வழியாக செம்மர கட்டைகள் கடத்தப்பட்டது எப்படி? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி துறைமுகம் வழியாக நாள்தோறும் ஏராளமான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் கடந்த அக்டோபர் மாதம் 14-ந்தேதி பருத்தி ஆடைகள் என்ற பெயரில் கண்டெய்னர்களில் பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவை கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட பார்சல்களில் செம்மர கட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து இந்த கட்டைகளை பிடிக்க கொச்சி, குஜராத் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களுக்கு தகவல் கொடுத்து முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்குள் செம்மர கட்டைகள் துபாய் நாட்டில் உள்ள ஜெபலலி என்ற துறைமுகத்துக்கு போய்ச்சேர்ந்தது. பின்னர் அந்த துறைமுகத்துக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்து செம்மர கட்டைகளை தூத்துக்குடி துறைமுகத்துக்கு மீண்டும் வரவழைத்தனர். அவை நேற்று முன்தினம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. அந்த பார்சல்களை பரிசோதனை செய்த போது, உள்ளே ரூ.2¼ கோடி மதிப்புள்ள 7 டன் செம்மர கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக செம்மர கட்டைகள் தப்பியது எப்படி? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி துறைமுகத்தில் மொபல் ஸ்கேனர் வசதி உள்ளது. மேலும் புதிதாக பெரிய ஸ்கேனர் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மொபல் ஸ்கேனர் மூலம் இறக்குமதி செய்து நமது நாட்டுக்குள் கொண்டு வரப்படும் பொருட்களை மட்டுமே சுங்கத்துறை பரிசோதனை செய்வார்களாம். அதுவும் சந்தேகப்படும் பார்சல்களையும், குறிப்பிட்ட பார்சல்கள், கண்டெய்னர்களை மட்டுமே சோதனை செய்வார்கள். ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் ஸ்கேன் செய்யப்படாதாம். எனவே பருத்தி ஆடை என்ற உடன் அதிகாரிகள், அவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
திருப்பூர்உடுமலை என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கொலை வழக்கு விசாரணை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:–என்ஜின...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
Share on faceb Share on twi இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
தென் இந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்க 23–வது ஆண்டு விழா மதுரை பழங்காநத்தத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க ...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
0 comments:
Post a Comment