Thursday, November 26, 2015
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் இன்ஸ்பையர் அறிவியல் முகாம் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இம்முகாமில் தூத்துக்குடி. திருநெல்வேலி விருதுநகர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் உள்ள 35 பள்ளிகளிலிருந்து 180 மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டுள்ளனர்.
துவக்கவிழாவில் முகாம் ஒருங்கிணைப்பாளர் வான்மதி வரவேற்றார். திருநெல்வேலிஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோமேக்னடிஸம் தலைவர் சதீஸ் குமார் அறிவியல் முகாமைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் அடிப்படை அறிவியல் கல்வியின் அவசியம்பற்றியும், தொழில்நுட்ப வளர்ச்சிதான் நாட்டினை மிக வேகமாக வளர்ச்சியடையச் செய்யும் என்றும், அறிவியல் குறித்த விழிப்புணர்வினை இந்h முகாம் மூலம் மாணவ, மாணவிகள் மற்றோர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கல்லூரி முதல்வர் நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். தனது வாழ்த்துரையில் பள்ளிப்பருவத்திலேயே மாணவ, மாணவியர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ளவேண்டும், அறிவியல் குறித்த விழிப்புணர்ச்சிக் கல்வியை ஆசிரியர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும், ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே எந்த நாட்டினைச் சார்ந்தவர்கள் என்பது எளிதாக எல்லோரிடமும் சென்று சேர்ந்து விடுகிறது. ஊதாரணமாக டாக்டர் அப்துல்கலாம் முதலில் சிறந்த விஞ்ஞானியாகவே உலகில் அடையாளம் காணப்பட்டார். நாட்டிற்கு அவரது பங்க அளப்பறியது. எனவே, மாணவ, மாணவியர்கள் சிறந்த விஞ்ஞானிகளாக உருப்பெறவேண்டும் என அறிவுறுத்தினார்.
சுயநிதிப்பிரிவின் இயக்குநர் சக்திவேல் முன்னிலை வகித்தார். வேதியியல் துறை ஆய்வக உதவியாளர் பரமேஷ்வரி நன்றியுரையாற்றினார். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் நாகராஜன், முகாம் ஒருங்கிணைப்பாளர் வான்மதி, ஆராய்சியாளர்கள் முத்துராஜ், தேவிப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலா, பிரியா, சுசிட்டா ஆகியோர் செய்திருந்தனர். மக்கள் தொடர்பு ஏற்பாடுகளை மக்கள் தொடர்புக்குழு தலைவர் பேராசிரியர் தேவராஜ் மற்றும் அலுவலர் சரவணன் சிறப்பாக செய்திருந்தனர்.
பத்தாம் வகுப்பில் 94சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் வாங்கிய அறிவியல் துறையில் பயிலும் மாணவர்கள் இம்முகாமில் முற்றிலும் இலவசமாக பங்குபெற்றுள்ளனர். இதற்காக மாணவர்களுக்கு தங்கும் வசதிகளும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை அறிவியல் துறையில் ஊக்கத்தொகையோடு (ரூ. 8000 – ரூ. 45000 வரை) பயில வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்த செயல்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இளம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்த்து அவர்களை சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்கி அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே இம்முகாமின் நோக்கமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
திருப்பூர்உடுமலை என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கொலை வழக்கு விசாரணை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:–என்ஜின...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Share on faceb Share on twi இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
0 comments:
Post a Comment