Wednesday, December 31, 2014

On Wednesday, December 31, 2014 by Unknown in ,    

Share on facebShare on twi
நடிகர் சல்மான் கான் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம்: திமுக கண்டனம்
இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ளது.
 
இலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் ராஜபக்சே 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சிறுசேனாவை நிறுத்தியுள்ளன. இதனால் அங்கு, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
 
இந்நிலையில், கொழும்புவில் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நடத்திய கண்புறை அறுவை சிகிச்சைக்கான நிகழச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்றார்.
 
பின்னர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார். நடிகர் சல்மான் கானின் இந்த செயலுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
ராஜபக்சேவுக்கு ஆதரவான பிரச்சார நிகழச்சியில் சல்மான் கான் பங்கேற்றது வன்மையாக கண்டிக்கதக்கது என திமுக அமைப்பு செயலாளர் ஜி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் சல்மான் கான் இலங்கைக்கு வரவில்லை என்று அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மோகன் சமர நாயகே மறுப்பு தெரிவித்துள்ளார்.

0 comments: