Tuesday, August 12, 2014

தென் இந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்க 23–வது ஆண்டு விழா மதுரை பழங்காநத்தத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் செல்வராஜ் பிள்ளை தலைமை தாங்கினார். ராஜா என்ஜினீயரிங் கல்லூரி தலைவர் கண.நாகராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய வெள்ளாளர், பிள்ளைமார், செங்குந்தர், முதலியார் கூட்டமைப்பு தலைவரும், நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான கே.ராஜன் கலந்து கொண்டு ஆண்டு விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:–
நம் நாட்டை வெள்ளையர்களிடம் இருந்து மீட்க போராடியவர்களில் முக்கிய இடம் பிடித்தவர் வ.உ.சி.பிள்ளை. சுதந்திர தியாகி மட்டுமல்ல அவர். ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்ட சமயத்தில் திருக்குறள், தொல்காப்பியம் போன்ற நூல்களுக்கு உரை எழுதி உள்ளார். தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை விரட்டியடிப்பது, கைது செய்வது என இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்கின்றனர்.
இது குறித்து தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனாலும் அவரது குரலுக்கு மத்திய அரசு செவி சாய்த்ததாக தெரியவில்லை. இது கண்டிக்கத்தக்கது. இலங்கையில் சுமார் 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கவும், தமிழக மீனவர்களை அத்து மீறி கைது செய்யவும் காரணமான ராஜபக்சேவை தூக்கிலிட வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சமுதாயம் தற்போது பிள்ளைமார், முதலியார், சோழியபிள்ளைமார், துளுவ வெள்ளாளர் என பல பிரிவுகளாக உள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெள்ளாளர் என ஒரே பெயருக்கு கீழ் இணைய வேண்டும். வெள்ளாளர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்தியமாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துவோம். அரசியல் நடத்திடவும், ஆட்சியை பிடிக்கவும் வ.உ.சி.யை முன்னிறுத்தி அனைவரும் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஏழைப்பெண்களுக்கு தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சங்க செயலாளர் வையாபுரி வரவேற்றார். முத்தையா பிள்ளை உள்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வ.உ.சி. பேரவை மாநில தலைவர் முருகேசன், பொதுச்செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
திருப்பூர்உடுமலை என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கொலை வழக்கு விசாரணை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:–என்ஜின...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
Share on faceb Share on twi இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
தென் இந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்க 23–வது ஆண்டு விழா மதுரை பழங்காநத்தத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க ...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...