Tuesday, August 12, 2014

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் தர்மாபுரம் அருகே உள்ள கன்னாம்பிவிளையை சேர்ந்தவர் செல்லம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
கன்னாம்பிவிளையில் உள்ள எனக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து கொண்டனர். அவர்கள், அந்த வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்து விட்டனர். நாங்கள் வீடு இல்லாமல் நடுத்தெருவில் தவித்து வருகிறோம். நாங்கள் அந்த வீட்டில் குடியிருக்கவும், எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தர விட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் டி.சரவணன், ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐகோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்ட பின்பு வீட்டை ஆக்கிரமித்துள்ளவர்கள் போலீசாருடன் சென்று வீட்டை இடித்து விட்டனர் என்று கூறினார்.
அப்போது நீதிபதி, போலீசார் தனியாருக்கு சொந்தமான வீட்டை இடிக்க பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம் என்று அரசு வக்கீலை பார்த்து கேள்வி எழுப்பினார். அதன்பின்பு, கோர்ட்டு உத்தரவிட்டபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜராகி உள்ளாரா என்று கேட்டார். அப்போது தான், இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ‘பிடிவாரண்டு‘ பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, இந்த பிடிவாரண்டு உத்தரவை செயல்படுத்தி இன்ஸ்பெக்டரை வருகிற 11–ந்தேதி ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
திருப்பூர்உடுமலை என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கொலை வழக்கு விசாரணை வருகிற 28–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது பற்றிய விவரம் வருமாறு:–என்ஜின...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Share on faceb Share on twi இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...