Wednesday, November 11, 2015
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு ஊராட்சி புனித அந்தொனியார் மேல்நிலைப்பள்ளி 07.11.2015 சுகாதாரத்துறை மூலம் நடைபெற்ற மிஷன் இந்திர தனுஷ் சிறப்பு தடுப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார் இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து கூறியதாவது.
மிஷன் இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 4 சுற்றுக்களாக அக்டோபர்இ நவம்பர்இ டிசம்பர் 2015 மற்றும் ஜனவரி 2016 வரை தொடர்ந்து 4 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற வார நாட்களில் நடைபெறுகிறது. அக்டோபர் மாத முதல் சுற்றில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6580 குழந்தைகளுக்கும், 394 கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம்; சுற்று நவம்பர் 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 2 வயதிற்குட்பட்ட தடுப்பூசி போடாமல் விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்குமான சிறப்பு இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து வழங்கும் முகாம் 2015 அக்டோபர் 7ம் தேதி முதல்; ஜனவரி 2016 வரை 2ம் கட்டமாக 16 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள,; 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 253 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பிரத்யேகமாக தடுப்பூசி மையம் நிறுவப்பட்டு கிராம சுகாதார செவிலியர், நகர்ப்புற சுகாதார செவிலியாகள் மூலம் தடுப்பூசி வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி மையம் காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை செயல்படும். கர்ப்பிணிகளுக்கும் மற்றும் 2 வயது வரை தடுப்பூசி விடுபட்ட குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் தடுப்பு மருந்து கொடுப்பது அவசியம். நடமாடும் தடுப்பூசி வழங்கும் மருத்துவ குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர்
.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், துணை இயக்குநர் (சுகாதாரப்ணிகள்) மரு.ச..உமா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment