Wednesday, November 11, 2015
ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 450வது புதிய கிளை நிறுவன தின நாளான இன்று திறக்கப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 450வது புதிய கிளை மற்றும் 950வது ஏடிஎம் மையம் ஸ்ரீவைகுண்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் உபேந்திரகாமத் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தேர்வுநிலை நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.அருணாசலம் புதிய கிளையை திறந்து வைத்தார்.
திருமதி. அருந்தபசு குத்துவிளக்கேற்றினார். தொழிலதிபர் ஆண்டிநாடார் பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து வைத்தார். கணினி சேவையை டாக்டர் பி.எம்.எஸ்.ஆஷிக் ஷமீம் தொடங்கி வைத்தார். நிலக்கிழார் கோட்டை கைலாசம் புதிய 950லிவது ஏடிஎம் சேவையை திறந்து வைத்தார். திருமதி. கே.ஜெயபாலா ஏடிஎம் மையத்தில் குத்துவிளக்கேற்றினார். முதல் ஏ.டி.எம். கார்டை தொழிலதிபர் குமார் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் இயக்குநர்கள் மகேந்திரவேல், அரவிந்த்குமார், சிதம்பரநாதன், பொதுமேலாளர்கள் குணசேகரன், தேவதாஸ், கந்தவேலு, ரவீந்திரன், துணைப் பொதுமேலாளர் அன்பழகன், உதவிப் பொதுமேலாளர் சூரியராஜ், தூத்துக்குடி மண்டல மேலாளர் கணேசன் உட்பட வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கிளை மேலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment