Sunday, November 29, 2015

On Sunday, November 29, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வர்த்தக காங்கிரஸ் சார்பில் நிவார‌ண உதவிகள் வழங்கப்பட்டன. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வர்த்தக காங்கிரஸ் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடியில் நடந்தது. மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஹெச்.வசந்தகுமார் கலந்துகொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார‌ண உதவிகள் வழங்கினார்.

இந்நிகழச்சியில் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவி பிரபாகரன், மாநகராட்சி கவுன்சிலர் சாமுவேல் ஞானதுரை, மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பால்துரை, மாநகர தலைவர் அருள் வளவன், செந்தூர்பாண்டி, மகிளா காங்கிரஸ் நிர்வாகி கஸ்தூரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments: