Sunday, November 29, 2015
தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 4வது நாளாக உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் 42ஆயிரம் பேருக்கு வழங்க்பபட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஏரிகள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. மாவட்டத்தின் புறநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மக்கள் வீடுகளின் மொட்டை மாடியில் ஏறி நின்றும், படகுகள் மூலம் வெளியேறியும் பாதுகாப்புக்காக தஞ்சம் அடைந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நிவாரண பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும் வெள்ள நிவாரண பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள நீரை வெளியேற்ற தேவையான மோட்டார்கள், டேங்கர் லாரிகளை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முழுமையாக ஈடுபட்டுள்ளது.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் பணியாளர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளான கோரம்பள்ளம், அய்யன்அடைப்பு, முத்தையாபுரம், குறிஞ்சிநகர், நேருநகர், பி.என்.டி.காலனி, தெற்கு வீரபாண்டியபுரம், சவேரியார்புரம், ஆரோக்கியபுரம், மடத்தூர் மற்றும் தெர்மல் நகரில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு பொட்டலங்களையும், குடிநீர் பாட்டில்களையும் வழங்கினர்.
மேலும் சேர்வைக்காரன் தட்டு, முடுக்குகாடு, கோவில்பிள்ளை நகர், கக்கன்ஜி நகர், மகிழ்ச்சி புரம், குரூஸ்புரம், புதுக்கோட்டை குமாரகிரி உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள 42ஆயிரம் பேருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டெர்லைட் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு வழங்கினர். மேலும் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்ற ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மின் மோட்டார் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment