Sunday, November 29, 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்புகளை சீரமைக்க ரூ.119.60 கோடி மதிப்பில் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் உத்தரவிற்கிணங்க சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
இன்று நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைத்தந்து மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த குடியிருப்பு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக சுற்றுலா மாளிகையில் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார், மேயர் அந்தோணி கிரேஸ் ஆகியோர் பங்கேற்று வெள்ள நீரை குடியிருப்பு பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற்றுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து மாநகராட்சிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கக்கன்ஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த குடிசை வீடுகளை இழந்த 238 நபர்களுக்கு நிவாரண நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார், இது தொடர்பாக கூறும் போது: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 651 குடிசை வீடுகள் பாதிக்ப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு நேற்று வரை ரூ,18.19 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (28.11.2015) மாநகராட்சிப் பகுதகளை சார்ந்த பாதியளவு வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.4100/- வீதம் 111 நபர்களுக்கும், முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5000/- வீதம் மொத்தம் 127 நபர்களுக்கும் மொத்தம் ரூ,10.90 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.29 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆனையர் பூங்கொடி அருமைக்கண், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், சார் ஆட்சியர் கோபாலசுந்தரராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
0 comments:
Post a Comment