Sunday, November 29, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்புகளை சீரமைக்க ரூ.119.60 கோடி மதிப்பில் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் உத்தரவிற்கிணங்க சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
இன்று நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைத்தந்து மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த குடியிருப்பு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக சுற்றுலா மாளிகையில் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார், மேயர் அந்தோணி கிரேஸ் ஆகியோர் பங்கேற்று வெள்ள நீரை குடியிருப்பு பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற்றுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து மாநகராட்சிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கக்கன்ஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த குடிசை வீடுகளை இழந்த 238 நபர்களுக்கு நிவாரண நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார், இது தொடர்பாக கூறும் போது: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 651 குடிசை வீடுகள் பாதிக்ப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு நேற்று வரை ரூ,18.19 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (28.11.2015) மாநகராட்சிப் பகுதகளை சார்ந்த பாதியளவு வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.4100/- வீதம் 111 நபர்களுக்கும், முழுமையாக வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.5000/- வீதம் மொத்தம் 127 நபர்களுக்கும் மொத்தம் ரூ,10.90 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.29 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆனையர் பூங்கொடி அருமைக்கண், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், சார் ஆட்சியர் கோபாலசுந்தரராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment