Friday, November 27, 2015
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் கிராமத்தில் தொடர் மழையால் தாழ்வான பகுதியில் வெள்ள சூழ்ந்து கொண்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து 45க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கன் சமூகத்தை சார்ந்த பெண்கள் குழந்தைகள் என பொதுமக்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். அங்கு காவல் பணியில் இருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பொன்தேவி, எஸ்.பி.ஏட்டு உட்பட பல காவலர்கள் சேர்ந்து அவர்களை மீட்டு ஜான்பாப்பிக்ஸ் உயர்நிலை பள்ளியில் தங்க வைத்து விட்டு முதலில் தாசில்தார் நா.பா.நாகராஜனை தொடர்பு கொண்டார்கள். தாசில்தரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
உடனடியாக எஸ்.ஐ.பொன்தேவி நிலைமையின் அவசரம் கருதி எஸ்.பி.அஸ்வின் கோட்னிஸிடம் விவரத்தை கூறினார்கள். எஸ்.பி.யின் அறிவுறுத்தலின் படி களத்தில் இறங்கினார்கள் புதியம்புத்தூர் காவல்நிலைய காவலர்கள்.
23.11.2015 முதல் 27.11.2015 வரை தங்கியிருந்த மக்களுக்கு காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என நல்ல உணவு மற்றும் சுத்தமான குடிநீர் மற்றும் மருத்துவ உதவி வழங்கி இன்று வரை மனித நேயத்துடன் உதவி வருகிறார்கள்; புதியம்புத்தூர் காவலர்கள்.
இதுபற்றி, எஸ்.ஐ. பொன்தேவியிடம் தொலைபேசி மூலம் கேட்டதற்கு: எஸ்.பி. ஐயா-வின் அறிவுறுத்தலின்படி எங்களது காவல்நிலைய காவலர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் செய்ய ஆரம்பித்தோம். பின்னர், அப்பகுதி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றோம். தனியார் ஜேசிபி மூலமும், தீயணைப்பு துறை மூலமாகவும் வீடுகளை சுற்றியுள்ள வெள்ள நீரை அகற்றி வருகிறோம். என்று கூறினார்.
காட்டு நாயக்க சமுதாய தலைவரிடம் கேட்ட போது: எஸ்.பி.ஐயா தான் எங்களை காப்பாற்றிய சாமி. எங்களது ஊருக்கு வெள்ளநீர் புகுந்ததும் நாங்கள் என்ன செய்வதென்று தவித்து வந்த நேரத்தில், எஸ்.பி. ஐயா தான் எங்களுக்கு, தங்க இடம், சாப்பிட உணவு, குடிக்க தண்ணீர், இலவச மருத்துவ வசதி போன்ற அனைத்து உதவிகளையும் நாங்கள் கேட்காமலேயே செய்து தந்தார். அவர் நூறாண்டு வாழ வேண்டும் என்று மனமாற பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பல ஊர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்த வேளையில் உதவிக்கு ஓடோடி வந்த புதியம்புத்தூர் காவல் நிலைய காவலர்களின் செயலை பாராட்டி வருகிறார்கள் பொதுமக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
«.þ.«.¾¢.Ó.¸.¯ñ½¡Å¢Ã¾ô§À¡Ã¡ð¼õ «ì - 5 Á¼òÐìÌÇõ ¾¡æ측 §Å¼ÀðÊ °Ã¡ðº¢ ÁýÈ ¾¨ÄÅ÷ S.§¸¡À¡Ä¸¢Õ‰½ý ¾¨Ä¨Á¢ø ¬Â¢Ãò¾¢üÌõ §ÁüÀ𧼡...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment