Saturday, November 28, 2015

On Saturday, November 28, 2015 by Tamilnewstv in    


திருச்சி 23.11.2015          
திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 4660 இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 19000000கோடி மதிப்பில் விலையில்லா மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி வழங்கினார்
      திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 52 வது வார்டு தேசிய கல்லூரி மைதானத்தில் இன்று 4660 குடும்பங்களுக்கு ரூபாய் 19200000 மதிப்பில் விலையில்லா மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவை வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிசாமி; தலைமையில் அரசுதலைமைகொறடா மனோகரன்  திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர்     குமார் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மின்வசிறி மிக்ஸி கிரைண்டர் ஆகியவற்றை வழங்கி கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் 10னாட்சி அவர்கள் தெரிவித்தது
      தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் ஏழை-எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் விரைவாக வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் இல்லத்தரசிகளின் இன்னலை போக்க மின்விசிறி மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த முதல்வரும் செயல்படுத்தாத சிறப்புத் திட்டங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் அம்மா அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 553074 இல்லத்தரசிகளுக்கு ரூ.2288067138 மதிப்பிலும் மின்சாதனப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 4 கட்டங்களில் இதுவரை 57073 இல்லத்தரசிகளுக்கு ரூ.236111000 மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு 5ம் கட்டமாக7380 இல்லத்தரசிகளுக்கு ரூ.30531060 மதிப்பிலான மின்சாதன பொருட்கள் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மேற்கு சட்டமன்ற தொகுதி மாநகராட்சி 52 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் 4660 இல்லத்தரசிகளுக்கு ரு.19200000 மதிப்பில் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்
      இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெயா ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மண்டல குழு தலைவர்கள் ஞானசேகரன்(கோ.அபிசேகபுரம்)மனோகரன் (பொன்மலை)  மாமன்ற உறுப்பினர்கள் முஸ்தபா  விஜி கலைவானன் ராஜா சண்முகம் உட்பட  பலர் கலந்து கொண்டனர்

0 comments: