Monday, December 07, 2015
தூத்துக்குடியில் மோட்டார் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து பைக் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி பகுதியில் வீட்டின் முன்பு மற்றும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்கள். மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஷ் உத்தரவுப்படி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் தூத்துக்குடி நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்கள். இதையடுத்து 2 பேரையும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பூபாலராயர்புரத்தை சேர்ந்த அசோக் என்பவருடைய மகன் மரிய அந்தோணி பூபஸ்டன் (19) மற்றும் எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் தெருவை சேர்ந்த டேனியல் ராஜா மகன் ஜேக்கப் ராஜா (19) என்பதும் தெரியவந்தது.
அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பூபாலராயபுரத்தை சேர்ந்த ராயப்பன் விஜய் என்பவருடைய வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி வடபாகம் போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். இவர்கள் வேறு எங்கெல்லாம் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு உள்ளார்கள் என்று போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
Share on faceb Share on twi இலங்கையில் அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்துள...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
தென் இந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்க 23–வது ஆண்டு விழா மதுரை பழங்காநத்தத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க ...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
0 comments:
Post a Comment