Monday, December 07, 2015

On Monday, December 07, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடியில் மோட்டார் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து பைக் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி பகுதியில் வீட்டின் முன்பு மற்றும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்கள். மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஷ் உத்தரவுப்படி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் தூத்துக்குடி நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தார்கள். 

அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்கள். இதையடுத்து 2 பேரையும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பூபாலராயர்புரத்தை சேர்ந்த அசோக் என்பவருடைய மகன் மரிய அந்தோணி பூபஸ்டன் (19) மற்றும் எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் தெருவை சேர்ந்த டேனியல் ராஜா மகன் ஜேக்கப் ராஜா (19) என்பதும் தெரியவந்தது.

அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பூபாலராயபுரத்தை சேர்ந்த ராயப்பன் விஜய் என்பவருடைய வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி வடபாகம் போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். இவர்கள் வேறு எங்கெல்லாம் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு உள்ளார்கள் என்று போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: