Monday, December 07, 2015
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அளிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆறுமுகநயினார் தலைமையில் நிவாரண உதவிகளை தேமுதிக தலைவர் விஜகாந்த் வழங்கினார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து குறிஞ்சிநகர், முத்தையாபுரம், முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், வெள்ள நிவாரணப்பணிகளில் அரசியாக்கக்கூடாது. கடந்த அக்டோபர் மாதத்திலே மத்திய அரசு, மழை வெள்ளம் வருவது குறித்து எச்சரிக்கை செய்தது. மாநில அரசு அதனை உதாசீனப்படுத்தியது. தூத்துக்குடியில் மழை வெள்ளத்த்திற்கு காரணம் உப்பாற்று ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான். வைகுண்டராஜன் போன்ற பெரிய மனிதர்கள் அந்த ஓடையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அதிமுக - திமுகவினர் ராஜா வீட்டு கன்றுகுட்டி போல உலா வருகின்றனர். அவர்கள் உண்மையிலே, ஊழல் வீட்டு கன்று குட்டிகள் தான் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment