Thursday, January 07, 2016

On Thursday, January 07, 2016 by Tamilnewstv in    


      திருச்சி  

திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்க உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சத்திரம் பேருந்துநிலைய அண்ணா சிலை எதிரே மாவட்ட தலைவர் மருதுபாண்டியன் தலைமையில் ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், இளநிலை பொறியாளருக்கு உதவிப்பொறியாளருக்கிணையான ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 16 அம்சகோரிக்கைகளை வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கரூர், அரியலூர்,பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் என 50 க்கும் மேற்பட்டவர் கலந்துகொண்டனர்.  மேற்கண்ட கோரிக்கைகளை வழியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில் உண்ணாரதத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி - திரு.பழனியப்பன் - மாநில செயலாளர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்க

0 comments: