Thursday, January 07, 2016

On Thursday, January 07, 2016 by Tamilnewstv in    


தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றவேண்டும் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமா வலியுறுத்தல்


 விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவம் 84 மாவட்ட செயலாளர்கள், 84 மாவட்ட பொருளாளர்கள்,234 தொகுதிக்கும், தொகுதி செயலாளர்கள் என புதிய நிர்வாகிகள்  அறிவிக்கப்பட்டு அதற்கான அறிமுகக்கூட்டம் திருச்சியில் தனியார் ஓட்டல் ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியன்  மாநகர செயலாளர் வழக்கறிஞர் அருள் தலைமையில்  புதிய நிர்வாகிகள் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளும், பாராட்டுகளும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதர்க்கான ஆணை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு அதற்க்கான  அவசர நடவடிக்கையை மேற்கொள்ளாமல்   பிரதமருக்கு கடிதம்  எழுதுவது மக்களை ஏமாற்றும் செயல் என குற்றம்சாட்டியுள்ளார், மேலும் ஜல்லிக்கட்டு நடத்த தாமதம் ஏற்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகளும் இணைந்து அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் மக்கள் நல கூட்டணியில் எந்த ஒரு பிளவும் ஏற்படவில்லை எனவும் தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சியின்  மாற்றாக வரும் தேர்தலை சந்திக்கும் எனவும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

0 comments: