Thursday, January 07, 2016
On Thursday, January 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழகத்தில் வீர விளையாட்டான
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம்
இயற்றவேண்டும் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமா வலியுறுத்தல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
தமிழகம் முழுவம் 84 மாவட்ட செயலாளர்கள், 84 மாவட்ட பொருளாளர்கள்,234 தொகுதிக்கும், தொகுதி செயலாளர்கள் என புதிய நிர்வாகிகள்
அறிவிக்கப்பட்டு அதற்கான அறிமுகக்கூட்டம் திருச்சியில் தனியார் ஓட்டல்
ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியன் மாநகர
செயலாளர் வழக்கறிஞர் அருள் தலைமையில்
புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளும், பாராட்டுகளும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை
சந்தித்த தொல்.திருமாவளவன் தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு
நடத்துவதர்க்கான ஆணை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசு
அதற்க்கான அவசர நடவடிக்கையை
மேற்கொள்ளாமல் பிரதமருக்கு கடிதம் எழுதுவது மக்களை ஏமாற்றும் செயல் என
குற்றம்சாட்டியுள்ளார், மேலும் ஜல்லிக்கட்டு நடத்த தாமதம் ஏற்படுத்தாமல்
மத்திய, மாநில அரசுகளும் இணைந்து அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த உரிய
நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்
மக்கள் நல கூட்டணியில் எந்த ஒரு பிளவும் ஏற்படவில்லை எனவும் தமிழகத்தில் மற்ற
அரசியல் கட்சியின் மாற்றாக வரும் தேர்தலை
சந்திக்கும் எனவும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் த...
-
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சி...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
-
Sir / Madam, The Press Release received from Transport Department regarding the Comprehensive Mobility Plan for Puducherry is attache...
-
உடுமலை : உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்று...
0 comments:
Post a Comment