Saturday, February 20, 2016
திருச்சியில் இருந்து பணகுடி நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த செல்வபெருமாள் ஓட்டி வந்தார். இன்று காலை 8 மணி அளவில் லாரி கயத்தாறு டோல் கேட் அருகே வந்தது. அப்போது திடீரனெ கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட் பண வசூல் கவுன்டர் மீது லாரி மோதியது.
இதில் அங்கு பணம் வசூல் செய்து கொண்டிருந்த வடக்கு இலந்தகுளத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 35) என்பவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விபத்து நடந்ததையடுத்து டோல்கோட் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த காளிராஜ் கூறும் போது, ‘நெல்லை– மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள முக்கியமான டோல்கேட் கயத்தாறு ஆகும். இங்கு உள்ள பண வசூல் கவுன்டர்களுக்கு பாதுகாப்பாக தடுப்பு சுவர், தடுப்பு கம்பிகள் என எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இது குறித்து நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் பலன் இல்லை. எனவே உடனடியாக நிர்வாகம் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் டோல்கேட் வழியாக வாகனங்கள் செல்வது பாதிக்கப்பட்டது. இதனால் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் வாகனங்கள் தேங்கி நின்றன. பின்னர் 2 கவுன்டர்கள் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் அந்த வழியாக சென்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
0 comments:
Post a Comment