Wednesday, February 10, 2016
தூத்துக்குடியில் வாகனம் மோதி உயிரிழந்த பாதயாத்திரை பக்தர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி விஸ்வபுரத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு, இருக்கன்குடிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது எப்போதும் வென்றான் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். 4பேர் படுகாயம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில சிகிச்சை பெற்று வந்த விஸ்வபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் (16) என்பவர் சிசிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதையடுத்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து, விபத்திற்கு காரணமானர்களை கைது செய்ய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் விஸ்வபுரத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 100பேர் பாளை ரோட்டில் விவிடி சிக்னல் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ரேனிஸ் ஜேசுபாதம், தென்பாகம் இன்ஸ்பெக்டர் சுரேஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கபடும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக காலை 10.40 மணி முதல் 11.25 வரை தூத்துக்குடி நெல்லை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment