Wednesday, February 10, 2016
மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே புளியம்பட்டி அருகே உள்ள உலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா (45). விவசாயி. இவரது மனைவி சரவணம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முருகையா வேலைக்கு செல்லமால் ஊர் சுற்றித்திரிந்துள்ளார். சரவணம்மாள் சிங்காத்தாகுறிச்சியில் தனது தோட்டத்தில் வேலைபார்த்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இதனால் முருகையாவுக்கும் அவரது மனைவி சரவணம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 21.3.2014 அன்று, தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகையா கோடாரியால் மனைவியை வெட்டிக் கொலை செய்தார். இதுதொடர்பாக புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகைய்யாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜெயராஜ், மனைவியை கொலைசெய்த முருகையாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏவிமுத்து ஆஜரானார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
-
பொதுமக்கள் உணவாக பயன்படுத்தாமல் தென்னை மரங்களுக்கு உரமாக மாறுவது சங்காயம் எனப்படும் மீன்கள்தான். சங்காயம் மீன்கள் ராமேசுவரம், பாம்பன் ப...
0 comments:
Post a Comment