Wednesday, February 10, 2016
மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே புளியம்பட்டி அருகே உள்ள உலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா (45). விவசாயி. இவரது மனைவி சரவணம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். முருகையா வேலைக்கு செல்லமால் ஊர் சுற்றித்திரிந்துள்ளார். சரவணம்மாள் சிங்காத்தாகுறிச்சியில் தனது தோட்டத்தில் வேலைபார்த்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இதனால் முருகையாவுக்கும் அவரது மனைவி சரவணம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 21.3.2014 அன்று, தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகையா கோடாரியால் மனைவியை வெட்டிக் கொலை செய்தார். இதுதொடர்பாக புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகைய்யாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஜெயராஜ், மனைவியை கொலைசெய்த முருகையாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏவிமுத்து ஆஜரானார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment