Friday, May 20, 2016
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக உடுமலையில் அதிமுக சார்பில் வெற்றி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஊர்வலம் தாராபுரம் சாலை வழியாக அதிமுக தலைமைத் தேர்தல் அலுவலகத்தைச் சென்றடைந்தது. இதில், உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுக அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். அதன்பின்னர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில், அவர் பேசியதாவது: இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலமாக, கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு மக்கள் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கொங்கு மண்டலத்தில் பொதுமக்கள் அதிமுகவுக்கு தங்கள் வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர். உடுமலைத் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளில் முழு கவனம் செலுத்துவேன் என்றார்.
மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ சி.சண்முகவேலு, உடுமலை டிஎஸ்பி விவேகானந்தன், ஆய்வாளர் தவமணி, அதிமுக நகரச் செயலாளர் கேஜி.சண்முகம், ஒன்றிய அதிமுக செயலாளர்கள் கே.ஆறுச்சாமி, நா.அண்ணாதுரை, ஆர்.ஜி.ஜெகநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம் உள்ளிட்டோர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment