Tuesday, May 17, 2016
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை தி.நகரில் சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் தங்களது வாக்கை பதிவு செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சிவகுமார், "எல்லா கட்சியுமே மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். யார் ஜெயிப்பாங்க என்பது தெரியாது. யார் ஜெயித்தாலும் முதல் வேலையாக அதை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 40 வருடத்தில் 1 கோடி பேரைக் குடிகாரர்களாக ஆக்கிவிட்டோம். 50 லட்சம் பேர் குடி நோயாளியாக இருக்கிறார்கள். குடும்பத்தலைவனைக் குடிகாரனாக்கி அவன் ஈரலைப் பெரிதாக்கி அவனை சாகடித்துவிட்டு இலவசங்கள் என்ற பெயரில் ஏன் வாக்கரிசிப் போடுகிறீர்கள்.
பாலியல் பலாத்காரம் என்று சொல்றோமே அதற்கு காரணம் மது. எவ்வளவு பெரிய கோழையாக இருந்தாலும் 400 மில்லி மது குடித்தான் என்றால் அசாத்திய தைரியம் வருகிறது. அதன் விளைவு அவனுடைய மிருக வெறிக்கு அம்மா, மகள், மனைவி என எந்த வித்தியாசமும் தெரியாது.
95 வருடமாக எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பெரியார் கஷ்டப்பட்டாரோ அந்த இனம் தான் டாஸ்மாக்கில் செத்துக் கொண்டிருக்கிறது. 7 கோடி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் இல்லையென்றால் படிப்படியாக அமல்படுத்துங்கள்" என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
0 comments:
Post a Comment