Thursday, September 08, 2016
காவேரி நீர் பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கால சூழ்நிலை கடந்து விட்டதாகவும், கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து இரு மாநிலங்களுக்கும் அனுப்பி தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கர்நாடக மேலவையின் எதிர்க்கட்சி தலைவரும், பாஜக வின் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஈஸ்வரப்பா, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்ப்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடக மக்களுக்கு கடும் மன வேதனை அளித்துள்ளதாகவும், தமிழகத்தின் தண்ணீர் தேவை அடுத்த சம்பா சாகுபடிக்கு மட்டும் தான், ஆனால் கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து இரு மாநிலங்களுக்கும் அனுப்பி தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும் காவேரி நீர் பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கால சூழ்நிலை கடந்து விட்டதாகவும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இன்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
0 comments:
Post a Comment