Wednesday, September 07, 2016
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் உயிரிழந்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதியவரின் இறுதிச்சடங்கை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றிணைந்து செய்திருப்பது மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
தாணே நகரில் உள்ள கௌசா பகுதியில் வசித்துவந்த வாமன் கதம் (65) என்பவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
உறவினர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தால், இறுதிச்சடங்கு செய்வதற்கு உதவி கிடைக்காமல் அவரது மனைவி செய்வதறியாமல் தவித்து நின்றார்.
இதை அறிந்த மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் 8 பேர், தாமாக முன்வந்து இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
மூங்கில் கழி, கயிறு, மண் பானைகள், அகர்பத்திகள், ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிவந்து, பிற்பகல் 3 மணியளவில் இறுதிச் சடங்கை அவர்கள் செய்தனர்.
மனித நேயத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கிய அந்த இளைஞர்களை மும்ப்ரா பகுதிவாசிகள் பாராட்டினர். மும்ப்ராவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம்.
இதற்கிடையே, மும்ப்ரா-கல்வா தொகுதி எம்எல்ஏவான ஜிதேந்திர அவாத், அந்த இளைஞர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக சமூக வலைதளமான முகநூலில் (ஃபேஸ்புக்) குறிப்பிட்டுள்ளார்
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment