Friday, September 09, 2016
போபால், அம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் அரசு மத்திய பிரதேசதம் மாநிலத்தில் ரூ. 10க்கு 'தாளி' உணவை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.தமிழ் நாட்டில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய 'அம்மா உணவகம்' திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏழை - எளிய மக்கள் மிக குறைந்த செலவில் வயிறார சாப்பிடுவதால் அம்மா உணவகம் திட்டம் மற்ற மாநிலங்களிலும் பாராட்டுப் பெற்றுள்ளது. பல மாநிலங்கள் தமிழ் நாட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி, அம்மா உணவகம் பற்றி ஆய்வு செய்து தங்கள் மாநிலத்தில் அது போன்று அமல்படுத்த ஏற்பாடு செய்து வருகின்றன. அம்மா உணவகம் திட்டத்தை பார்த்து ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகளும் தங்களுடைய மாநிலங்களில் மலிவு விலையில் அரசு உணவு விற்பனையை தொடங்கினர்.இவ்வரிசையில் இப்போது மத்திய பிரதேச மாநில பா.ஜனதா அரசு இணைந்து உள்ளது. அம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் அரசு மத்திய பிரதேசதம் மாநிலத்தில் ரூ. 10-க்கு 'தாளி' உணவை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.மத்திய பிரதேசத்தில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை செப்டம்பர் 25-ம் தேதி தொடங்க பாரதீய ஜனதா அரசு திட்டமிட்டு உள்ளது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாளான 25-ம் தேதி தொடங்க திட்டமிட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சப்பாத்தி, பருப்பு, சாதம், காய்கறிகள் மற்றும் உறுகாய் அடங்கிய ’தாளி’ உணவை ரூபாய் 10-க்கு விற்பனை செய்ய சவுகான அரசு முடிவு செய்து உள்ளது. முதலில் மலிவு விலை உணவகங்களை குவாலியர், போபால், இந்தூர் மற்றும் ஜாபல்பூரில் தொடங்கப்பட உள்ளது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment