Friday, September 09, 2016
போபால், அம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் அரசு மத்திய பிரதேசதம் மாநிலத்தில் ரூ. 10க்கு 'தாளி' உணவை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.தமிழ் நாட்டில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய 'அம்மா உணவகம்' திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏழை - எளிய மக்கள் மிக குறைந்த செலவில் வயிறார சாப்பிடுவதால் அம்மா உணவகம் திட்டம் மற்ற மாநிலங்களிலும் பாராட்டுப் பெற்றுள்ளது. பல மாநிலங்கள் தமிழ் நாட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி, அம்மா உணவகம் பற்றி ஆய்வு செய்து தங்கள் மாநிலத்தில் அது போன்று அமல்படுத்த ஏற்பாடு செய்து வருகின்றன. அம்மா உணவகம் திட்டத்தை பார்த்து ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகளும் தங்களுடைய மாநிலங்களில் மலிவு விலையில் அரசு உணவு விற்பனையை தொடங்கினர்.இவ்வரிசையில் இப்போது மத்திய பிரதேச மாநில பா.ஜனதா அரசு இணைந்து உள்ளது. அம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் அரசு மத்திய பிரதேசதம் மாநிலத்தில் ரூ. 10-க்கு 'தாளி' உணவை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.மத்திய பிரதேசத்தில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை செப்டம்பர் 25-ம் தேதி தொடங்க பாரதீய ஜனதா அரசு திட்டமிட்டு உள்ளது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாளான 25-ம் தேதி தொடங்க திட்டமிட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சப்பாத்தி, பருப்பு, சாதம், காய்கறிகள் மற்றும் உறுகாய் அடங்கிய ’தாளி’ உணவை ரூபாய் 10-க்கு விற்பனை செய்ய சவுகான அரசு முடிவு செய்து உள்ளது. முதலில் மலிவு விலை உணவகங்களை குவாலியர், போபால், இந்தூர் மற்றும் ஜாபல்பூரில் தொடங்கப்பட உள்ளது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment