Saturday, September 24, 2016
தேனி: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனியில் வாக்காளர்களுக்கு பணம், சேலைகளை வழங்கும் பணியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் பணியில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. தேனி நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் நாராயணபிரபு விருப்ப மனு கொடுத்துள்ளார். கடந்த 2006, 2011 ஆகிய தேர்தல்களில், இந்த வார்டில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில், இப்போதே ‘வேலையை’ தொடங்கி விட்டார் நாராயணபிரபு.
தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டி அக். 2ம் தேதி கற்பக விநாயகர், முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சகஸ்ர கலச அபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேக பூஜை நடத்த உள்ளார். இதில் கலந்துகொள்ளுமாறு, பெரிய சைஸ் தாம்பூல தட்டில் தாலி, மஞ்சள் கயிறு, சேலை மற்றும் பழங்கள் சகிதத்துடன் பணமும் வைத்து வீடு, வீடாக வழங்கி வருகிறார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு, வெளிப்படையாக இதுபோன்று பணம், பொருள் கொடுக்க முடியாது என்பதால், இப்போதே அதிமுகவினர் களம் இறங்கியிருப்பது வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...
0 comments:
Post a Comment