Saturday, September 24, 2016
தேனி: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனியில் வாக்காளர்களுக்கு பணம், சேலைகளை வழங்கும் பணியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் பணியில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. தேனி நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் நாராயணபிரபு விருப்ப மனு கொடுத்துள்ளார். கடந்த 2006, 2011 ஆகிய தேர்தல்களில், இந்த வார்டில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில், இப்போதே ‘வேலையை’ தொடங்கி விட்டார் நாராயணபிரபு.
தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டி அக். 2ம் தேதி கற்பக விநாயகர், முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சகஸ்ர கலச அபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேக பூஜை நடத்த உள்ளார். இதில் கலந்துகொள்ளுமாறு, பெரிய சைஸ் தாம்பூல தட்டில் தாலி, மஞ்சள் கயிறு, சேலை மற்றும் பழங்கள் சகிதத்துடன் பணமும் வைத்து வீடு, வீடாக வழங்கி வருகிறார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு, வெளிப்படையாக இதுபோன்று பணம், பொருள் கொடுக்க முடியாது என்பதால், இப்போதே அதிமுகவினர் களம் இறங்கியிருப்பது வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...