Sunday, February 05, 2017
On Sunday, February 05, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த தலித் இளம் பெண் நந்தினி இந்து முன்னணியைச் சார்ந்த மணிகண்டன் என்பவரால் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார், இதில் காவல்துறை நடவடிக்கை மெத்தனப்போக்காக இருப்பதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது,
மேலும் நந்தினியின் தாயார் ரா சக்கிளி கொடுத்த புகாரை மாற்றி எழுதி கையெழுத்து வாங்கக் கொண்டு புகாருக்கு உரிய நடவடிக்கை அலைகழித்து 15 நாட்கள் கழித்து பிணமாக மீட்டுக் கொடுத்துள்ளார்கள்
இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் குற்றவாளிகள் 4 பேரில் 2 பேருக்கு மட்டும் தற்பொழுது குண்டர் சட்டம் கொத்துள்ளார்கள். அதுவும் தோழமைக் கட்சிகள் இறங்கி போராடிய பின்னர் இந்த நடவடிக்கை . மேலும் இந்து முன்னனியைச் சேர்ந்த மேலும் ஒரு குற்றவாளியான ராஜசேகரை கைது செய்ய வேண்டும்.
தமிழக அரசு நந்தினியின் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடுத் தொகையும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.
இந்த கொலை வழக்கில் அலட்சியம் காட்டிய போலீசார் மீது தாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் மாநில பொதுச் செயலாளர் துரை சந்திரசேகர், SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, தீண்டாமை ஒழிப்பு முன்னன் மாவட்ட பொருளாளர் சாமுவேல்ராஜ்' CPI (M) மாவட்ட செயற்குழு துரைசாமி, விடுதலை சிறுத்தை கட்சி பெரம்பலூர் | அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டை...
0 comments:
Post a Comment