Sunday, April 23, 2017
On Sunday, April 23, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பழனிக்குமார் (வயது 35). இவர், மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, காலுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாயை துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சுத்தம் செய்ததாக தெரிகிறது.
இதை கண்ட சமூக ஆர்வலர் பழனிக்குமார் திடீரென அந்த பகுதியில் உள்ள ஆழமான கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கினார். பின்னர் அவர் கழிவுநீர் கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்ட பகுதிக்கு உள்ளே சென்று போராட்டம் நடத்தினார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் சுகாதார அதிகாரி முருகன் ஆகியோர் கழிவுநீர் கால்வாயின் உட்புறம் இருந்த பழனிக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதிகாரிகள் உறுதி
மேலும், உடனடியாக வெளியே வருமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாநகராட்சி உதவி கமிஷனர் சம்பவ இடத்துக்கு வந்து துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தால் மட்டுமே வெளியே வருவேன் என்று பிடிவாதமாக உள்ளேயே இருந்தார். இதையடுத்து எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பழனிக்குமார் போராட்டத்தை கைவிட்டு வெளியே வந்தார்.
சுமார் 1 மணி நேரம் மேல்பகுதி மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்க்குள் தொடர்ந்து இருந்ததால் வெளியே வந்த பழனிக்குமார் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்பூரில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி சமூக ஆர்வலர் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
குடிநீர் கேட்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
வடகொரியத் தலைவரைக் கொல்வதைக் கற்பனைக் கதையாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படம் அமெரிக்காவில் சில திரையரங்...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தையொட்டி, பல மாவட்டங்களில் ஞாயி...

0 comments:
Post a Comment