Sunday, April 23, 2017
On Sunday, April 23, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர் சாமுண்டிபுரம்–வளையங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 5–ந்தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரிகளும், டாஸ்மாக் கடை அதிகாரிகளும் 15 நாட்களில் கடையை மூடுவதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் நேற்று வரை கடை செயல்பட்டுவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த கடையை மூடக்கோரி நேற்று மீண்டும் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், டாஸ்மாக் அதிகாரிகளும் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதற்கிடையே திருப்பூரில் உள்ள அனைத்து காட்சிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட உதவி கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து கடையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த மாதம் 8–ந் முதல் டாஸ்மாக் கடை செயல்படாது என்று கூறினார். இந்த தகவலை அனைத்து கட்சி சார்பில் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் பொதுமக்களிடம் வந்து கூறினார்.
சாலை மறியல்
ஆனால்,எங்களுக்கு உடனடியாக கடையை மூடவேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் எனக்கூறி வளையங்காடு–சாமுண்டிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல் மற்றும் திருப்பூர் தெற்கு உதவி கமிஷனர் மணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
வடகொரியத் தலைவரைக் கொல்வதைக் கற்பனைக் கதையாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படம் அமெரிக்காவில் சில திரையரங்...
-
காங்கயம் அருகேயுள்ள வீணம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). கட்டிட தொழிலாளியான இவரும், இவரது மனைவி மணிமேகலை (35) ஆகிய இருவரும...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
திருப்பூர்,செப்.29- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கர்நாடகா நீதிமன்றம் தவறான...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
அதிகரித்துவரும் ஓட்கா விலையைக் கட்டுப்படுத்தும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே சிக்கலாகிவரும் ரஷ்ய பொர...

0 comments:
Post a Comment