Sunday, April 23, 2017
On Sunday, April 23, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர் சாமுண்டிபுரம்–வளையங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 5–ந்தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரிகளும், டாஸ்மாக் கடை அதிகாரிகளும் 15 நாட்களில் கடையை மூடுவதாக உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் நேற்று வரை கடை செயல்பட்டுவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த கடையை மூடக்கோரி நேற்று மீண்டும் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசாரும், டாஸ்மாக் அதிகாரிகளும் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதற்கிடையே திருப்பூரில் உள்ள அனைத்து காட்சிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட உதவி கலெக்டர் ஷ்ரவன் குமாரை சந்தித்து கடையை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடுத்த மாதம் 8–ந் முதல் டாஸ்மாக் கடை செயல்படாது என்று கூறினார். இந்த தகவலை அனைத்து கட்சி சார்பில் பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள் பொதுமக்களிடம் வந்து கூறினார்.
சாலை மறியல்
ஆனால்,எங்களுக்கு உடனடியாக கடையை மூடவேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் எனக்கூறி வளையங்காடு–சாமுண்டிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸ் துணை கமிஷனர் திஷா மிட்டல் மற்றும் திருப்பூர் தெற்கு உதவி கமிஷனர் மணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...

0 comments:
Post a Comment