Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
தாராபுரம்–கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த காரில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 48 இருந்தன. இதையடுத்து காரை ஓட்டி வந்த மூலனூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமாரை (வயது 32) பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கொண்டு வந்தது போலி மதுபாட்டில்கள் என்பதும், அவற்றை தாராபுரம்–திருப்பூர் ரோட்டில் வேங்கிபாளையம் பகுதியில் விவசாயி பழனிசாமி தனது தென்னந்தோப்பில் நடத்தி வரும் போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.
455 லிட்டர் எரிசாராயம்
பின்னர் அவரை அழைத்துக்கொண்டு தென்னந்தோப்புக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அதில் 2 பேர் மட்டும் போலீசில் சிக்கினார். அவர், செங்கப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் (35), வெள்ளகோவிலை சேர்ந்த செந்தில்வெங்கடேஷ் (35) என தெரியவந்தது.
உடனே போலீசார் தென்னந்தோப்பில் இருந்த ஒரு அறையை சோதனை செய்தனர். அப்போது, அங்கு 455 லிட்டர் எரிசாராயமும், 100 போலி
மதுபாட்டில்களும் இருந்தன. இதுதவிர காலி மதுபாட்டில்கள், அதற்குரிய மூடிகள், புதுச்சேரி மதுபான வகை லேபிள்கள், அசல் மதுபான பாட்டில் போல் ‘சீல்’ வைக்க கையால் இயக்கப்படும் எந்திரம் ஆகியவை இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
4 பேர் கைது
ரமேஷ் கொடுத்த தகவலின் பேரில், செங்கப்பள்ளியை அடுத்த காளிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 530 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவற்றை பதுக்கி வைக்க உதவிய அந்த தோட்ட காவலாளியான செங்கப்பள்ளியை சேர்ந்த ராமலிங்கத்தை (35) போலீசார் பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சதீஸ்குமார், ரமேஷ், செந்தில்வெங்கடேஷ், ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய பழனிசாமி உள்ளிட்ட 4 பேரை தேடிவருகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...

0 comments:
Post a Comment