Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11–ந்தேதி பெண்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து திருப்பூருக்குட்பட்ட பொதுமக்கள் நேற்று திருப்பூர் புதிய பஸ்நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் பழனிகுமார் தலைமை தாங்கினார். சட்டபஞ்சாயத்து இயக்க மாநில நிர்வாகி அண்ணாதுரை, லஞ்ச ஒழிப்பு கூட்டமைப்பு நிறுவனர் நாஞ்சில் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில், தடியடி சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும். தடியடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுபானக்கடைகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நிலங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இதில் முன் வைக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment