Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11–ந்தேதி பெண்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து திருப்பூருக்குட்பட்ட பொதுமக்கள் நேற்று திருப்பூர் புதிய பஸ்நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் பழனிகுமார் தலைமை தாங்கினார். சட்டபஞ்சாயத்து இயக்க மாநில நிர்வாகி அண்ணாதுரை, லஞ்ச ஒழிப்பு கூட்டமைப்பு நிறுவனர் நாஞ்சில் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில், தடியடி சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும். தடியடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுபானக்கடைகளை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நிலங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இதில் முன் வைக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment