Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏழை, எளிய கூலித்தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் பெரும் தொகையை மதுபானத்திற்கே செலவு செய்வதால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் நிர்வாகம் பொது மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 15 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபான பிரியர்கள் லீவு எடுக்காமல் தினமும் பின்னலாடை நிறுவனத்திற்கு வருகிறார்கள். ஒரு சில கூலித்தொழிலாளர்கள் மதுக்கடைகள் துாரமாக இருப்பதால் குடியை நிறுத்தியுள்ளனர். பின்னலாடை நிறுவனங்களில் கடினமாக உழைக்கும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் தற்போது குடிப்பதை நிறுத்தியுள்ளனர். பல குடும்பங்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பின்னலாடை நிறுவனங்களுக்கு அனைத்து தொழிலாளர்களும் லீவு எடுக்காமல் வருவதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. பின்னலாடை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாநகரில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வசதி, தரமான தார் ரோடு, குப்பைகளை அகற்றியும், சாக்கடை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆங்காங்கே சாக்கடை கழிவுகள் தேங்கி கிடப்பதால் தொழிலாளர்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் டீமா தலைவர் முத்துரத்தினம் கூறியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment