Monday, April 24, 2017
On Monday, April 24, 2017 by Unknown in Tiruppur
திருப்பூர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏழை, எளிய கூலித்தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் பெரும் தொகையை மதுபானத்திற்கே செலவு செய்வதால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் நிர்வாகம் பொது மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 15 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபான பிரியர்கள் லீவு எடுக்காமல் தினமும் பின்னலாடை நிறுவனத்திற்கு வருகிறார்கள். ஒரு சில கூலித்தொழிலாளர்கள் மதுக்கடைகள் துாரமாக இருப்பதால் குடியை நிறுத்தியுள்ளனர். பின்னலாடை நிறுவனங்களில் கடினமாக உழைக்கும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் தற்போது குடிப்பதை நிறுத்தியுள்ளனர். பல குடும்பங்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பின்னலாடை நிறுவனங்களுக்கு அனைத்து தொழிலாளர்களும் லீவு எடுக்காமல் வருவதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. பின்னலாடை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாநகரில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வசதி, தரமான தார் ரோடு, குப்பைகளை அகற்றியும், சாக்கடை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆங்காங்கே சாக்கடை கழிவுகள் தேங்கி கிடப்பதால் தொழிலாளர்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் டீமா தலைவர் முத்துரத்தினம் கூறியுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருச்சி மார்ச் 26 தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment