Thursday, June 01, 2017
திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால்தலைகள் பழம் பொருட்களின் மாபெரும் கண்காட்சி். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்களின் மாபெரும் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஸ்ரீநிவாசா ஹாலில் ஜீலை 7, 8, 9 உள்ளிட்ட மூன்று நாட்களில் நடைபெறுகிறது. கண்காட்சியில் இந்தோ டேனிஷ் நாணயங்கள், இந்தோ டச்சு நாணயங்கள், இந்தோ பிரெஞ்சு நாணயங்கள், ஆங்கில கிழக்கிந்திய நிறும நாணயங்கள், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள், சுதந்திர இந்திய நணயங்களில் பொது பயன்பாடு மற்றும் நினைவார்த்த நாணயங்கள் தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, அலுமினியம், நிக்கல், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உள்ளிட்ட நாணயங்களுடன் சேரர், சோழர், பாண்டியர் கால நாணயங்களும் காட்சிப் படுத்துகிறார்கள். பணத்தாள்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா , இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், வெனிசுலா, சாம்பியா , ஜிம்பாபே, இங்கிலாந்து, ஆப்ரிக்கா என இரு நூறு நாடுகளின் பணத்தாள்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன. பழங்கால பொருட்களில் லாந்தர் விளக்குகள், தராசு, எடைக்கற்கள், படி, மரப்பாச்சி பொம்மைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட பல்வேறு பொருட்களும், தபால் தலைகளும் காட்சிப் படுத்துகிறார்கள். அனுமதி இலவசம் . அனைவரும் வருக. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகரன், பொருளர் அப்துல் அஜீஸ், பாண்டி, முகமதுசுபேர், கமல கண்ணன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்து வருகிறார்கள்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment