Tuesday, August 15, 2017

On Tuesday, August 15, 2017 by Tamilnewstv in ,    
தமிழக காவல்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.யு.அருண் இ.கா.ப. அவர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று 15.08.17-ம் தேதி காலை சென்னை கலைவானர் அரங்கத்தில் சுதந்திர தின விழாவில்
வழங்கினார்.

மேலும்திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் திரு.மு.அருள் அமரன் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரக உதவி ஆணையராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.மு.அங்குசாமி ஆகியோர்களுக்கும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது. 
காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த திருச்சி மாநகர காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அமர்வு நீதிமன்ற காவல் நிலைய தலைமைக் காவலர் 2517 திரு.N.கோவிந்தராஜ் மற்றும் மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் 2810 திரு.வு.அருள் முருகானந்தம் ஆகியோர்களுக்கும் முதலமைச்சரால் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
காவல்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்தமைக்காக திருச்சி கைவிரல்ரேகை பதிவுக்கூடத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.ளு.ராதாகிரு~;ணன்கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கு.இருதயராஜ் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு தலைமைக் காவலர் 2872 திரு.ளு.சேகர் மாநகர குற்றப்பிரிவு பெண் முதல்நிலைக் காவலர் 936 திருமதி.ஆ.வள்ளி மற்றும் மாநகர ஆயுதப்படையை சேர்ந்த தலைமைக் காவலர் 2793 திரு.மு.வெங்கடே~;பாபு முதல்நிலைக் காவலர் 2113 திரு.ளு.சுந்தரமூர்த்தி ஆகியோர்களுக்கு முதலமைச்சரால் அண்ணா பதக்கம் சென்னையில் இன்று 15.08.2017-ம் நடைபெற்ற சுதந்திர விழாவில் வழங்கப்பட்டது.

0 comments: