Tuesday, March 20, 2018

On Tuesday, March 20, 2018 by Tamilnewstv in ,    
VHP சார்பாக அயோத்தியில் தொடங்கி இராமேஸ்வரம் வரை  முடியும்  ரதயாத்திரையை தமிழ்நாட்டில் செங்கோட்டை வழியாக வருவதை நிறுத்த வேண்டும் என்றும், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை சீர்குலைக்கவே இந்த ரதயாத்திரை என்று இதை இன்று செங்கோட்டையில் நுழையவிடக்கூடாது என்று அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுத்தும் மேலும் இதை செங்கோட்டையில் தடுக்க செல்வோம் என்று இன்று செல்ல இருந்த அனைத்து கட்சி தலைவரகளையும் கைது செய்தது காவல்துறை. மேலும் இதை தடுக்க சென்ற SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் உள்பட பல இயக்கங்களின், கட்சிகளின் தலைவர்களை  காவல்துறையின் கைது நடவடிக்கை கண்டித்து திருச்சி மாவட்டம் சார்பாக SDPI கட்சி சார்பாக  திருச்சி மாவட்ட செயலாளர் இமாம் ஹஸ்ஸான் தலைமையில் திருச்சி டோல்கேட் மீனாட்சி பெட்ரோல் பங்க் அருகில் தேசிய நெடுஞ்சாலை மறியல் போராட்டம் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.

SDPI கட்சியின் நிர்வாகிகளான திருச்சி மாவட்ட செயலாளர் ரபிங் முகமது, பொருளாலர் முஸ்தபா, முன்னால் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் கட்சியின் செயல்வீரர்கள் என 40க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.

0 comments: