Saturday, April 28, 2018

On Saturday, April 28, 2018 by Tamilnewstv   
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம்.
திருச்சி.

திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் அன்பில் பவுண்டேஷன் இனைந்து ஆண்கள், பெண்கள், இருபாலருககுமான, மாநில அளவிலான அன்பில் பாஸ்கர் நினைவு கோப்பைக்கான வாலிபால் போட்டி லீக் முறையில் திருச்சி, பிஷப் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகக இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, அன்பில் பவுண்டேஷன், திருவாரூர் வேலுடையார் நண்பர்கள் ஆகிய 4 அணிகளும்,  பெண்கள் பிரிவில் தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர், தத்தனுர், மீனாட்சி ராமாசாமி கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை சாய் ஆகிய 4 அணிகளும் பங்கேற்கின்றன.

போட்டியை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் டி. பால் தயாபரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் திருச்சி நந்தா கேஸ் ஏஜென்சி  கே. செந்தில்வேல், தமிழ் நாடு வாலிபால் சங்க சீனியர் துணை தலைவர் மற்றும் மாவட்ட வாலிபால் சங்க தலைவர் தங்க பிச்சையப்பா, மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

0 comments: