Thursday, May 09, 2019
திருச்சி அருகே உள்ள மண்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. 24 வயதாகும் இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரசவம் நடந்து முடிந்தது. அப்போது முதல் இவரது வயிறு பகுதி வீங்கிய வடிவில் இருந்துள்ளது. வயிறு தொப்பை காரணமாக இவ்வாறு இருக்கலாம் என்று பெரியவர்கள் கூறிய ஆலோசனையின்படி மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு இவருக்கு வயிற்றில் வலி அதிகமாகியுள்ளது. இதனால் வேறு வழியின்றி திருச்சி புத்தூரில் உள்ள "க்யூ மெட்" மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பை அருகே உள்ள சினைப்பையில் இருந்து இந்த கட்டி முளைக்கத் தொடங்கியுள்ளது. இதை அவரும், அவரது குடும்பத்தாரும் கவனிக்கத் தவறிவிட்டனர். இதன் காரணமாக அந்த கட்டி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னரே அவர்கள் உள்ளூர் மருத்துவரின் ஆலோசனையின்படி எங்களது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதனடிப்படையில் ஸ்கேன் பரிசோதனைக்குப் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்
மேலும், இந்த கட்டி திசு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் இந்த கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பது குறித்து தெரியவரும். இதன் மூலம் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது கிடையாது. வயிறு பெரிதாக இருந்தால் தொப்பை, அப்படித்தான் இருக்கும் என்ற நிலைமையில் இருந்து விடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்” என்றார்.
மேலும், இந்த கட்டி திசு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் இந்த கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பது குறித்து தெரியவரும். இதன் மூலம் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது கிடையாது. வயிறு பெரிதாக இருந்தால் தொப்பை, அப்படித்தான் இருக்கும் என்ற நிலைமையில் இருந்து விடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்” என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...


0 comments:
Post a Comment