Thursday, May 09, 2019
திருச்சி அருகே உள்ள மண்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. 24 வயதாகும் இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரசவம் நடந்து முடிந்தது. அப்போது முதல் இவரது வயிறு பகுதி வீங்கிய வடிவில் இருந்துள்ளது. வயிறு தொப்பை காரணமாக இவ்வாறு இருக்கலாம் என்று பெரியவர்கள் கூறிய ஆலோசனையின்படி மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு இவருக்கு வயிற்றில் வலி அதிகமாகியுள்ளது. இதனால் வேறு வழியின்றி திருச்சி புத்தூரில் உள்ள "க்யூ மெட்" மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பை அருகே உள்ள சினைப்பையில் இருந்து இந்த கட்டி முளைக்கத் தொடங்கியுள்ளது. இதை அவரும், அவரது குடும்பத்தாரும் கவனிக்கத் தவறிவிட்டனர். இதன் காரணமாக அந்த கட்டி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னரே அவர்கள் உள்ளூர் மருத்துவரின் ஆலோசனையின்படி எங்களது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதனடிப்படையில் ஸ்கேன் பரிசோதனைக்குப் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்
மேலும், இந்த கட்டி திசு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் இந்த கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பது குறித்து தெரியவரும். இதன் மூலம் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது கிடையாது. வயிறு பெரிதாக இருந்தால் தொப்பை, அப்படித்தான் இருக்கும் என்ற நிலைமையில் இருந்து விடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்” என்றார்.
மேலும், இந்த கட்டி திசு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் இந்த கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பது குறித்து தெரியவரும். இதன் மூலம் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது கிடையாது. வயிறு பெரிதாக இருந்தால் தொப்பை, அப்படித்தான் இருக்கும் என்ற நிலைமையில் இருந்து விடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்” என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment