Thursday, May 09, 2019
திருச்சி அருகே உள்ள மண்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. 24 வயதாகும் இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரசவம் நடந்து முடிந்தது. அப்போது முதல் இவரது வயிறு பகுதி வீங்கிய வடிவில் இருந்துள்ளது. வயிறு தொப்பை காரணமாக இவ்வாறு இருக்கலாம் என்று பெரியவர்கள் கூறிய ஆலோசனையின்படி மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு இவருக்கு வயிற்றில் வலி அதிகமாகியுள்ளது. இதனால் வேறு வழியின்றி திருச்சி புத்தூரில் உள்ள "க்யூ மெட்" மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பை அருகே உள்ள சினைப்பையில் இருந்து இந்த கட்டி முளைக்கத் தொடங்கியுள்ளது. இதை அவரும், அவரது குடும்பத்தாரும் கவனிக்கத் தவறிவிட்டனர். இதன் காரணமாக அந்த கட்டி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னரே அவர்கள் உள்ளூர் மருத்துவரின் ஆலோசனையின்படி எங்களது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதனடிப்படையில் ஸ்கேன் பரிசோதனைக்குப் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார்
மேலும், இந்த கட்டி திசு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் இந்த கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பது குறித்து தெரியவரும். இதன் மூலம் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது கிடையாது. வயிறு பெரிதாக இருந்தால் தொப்பை, அப்படித்தான் இருக்கும் என்ற நிலைமையில் இருந்து விடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்” என்றார்.
மேலும், இந்த கட்டி திசு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் இந்த கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பது குறித்து தெரியவரும். இதன் மூலம் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்வது கிடையாது. வயிறு பெரிதாக இருந்தால் தொப்பை, அப்படித்தான் இருக்கும் என்ற நிலைமையில் இருந்து விடுகிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. உரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்” என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment