Monday, February 17, 2020
திருச்சி 17.02.2020
திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் மக்கள் பணி விரைவாக செய்திட வழிவகை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சியை சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். கூட்டம் அரங்கில் அமர வைக்கப்பட்ட அவர்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சந்தித்தார்.
அப்போது கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டாக அவரிடம் மனு அளித்தனர்.
ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டு கணினி முறையில் பணம் பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை அமைத்தல், தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட பணிகள் செய்யும்போது தாமதம் ஏற்படுகிறது.
எனவே பழைய முறைப்படி ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையை கையாளும் அதிகாரத்தை தரக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு, செய்தியாளர்களிடம் கூறும்போது....... ஆன்லைன் பரிவர்த்தனை முறையானது மத்திய அரசு கொண்டு வந்த திட்டமாகும். எனவே அதனை மாற்ற இயலாது. அதேசமயம் ஆன்லைன் பரிவர்த்தனையில் சில இடங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கிராம ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அது விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மன் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது....... ஆன்லைன் பண பரிவர்த்தனையால் பல பணிகள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் பணியை விரைவாக செய்ய பழைய முறைப்படி காசோலையில் கிராம ஊராட்சி தலைவர்கள் கையொப்பமிடும் அதிகாரத்தை வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் விரைவாக கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் விரைவில் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் மக்கள் பணி விரைவாக செய்திட வழிவகை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சியை சேர்ந்த கிராம ஊராட்சி தலைவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். கூட்டம் அரங்கில் அமர வைக்கப்பட்ட அவர்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சந்தித்தார்.
அப்போது கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டாக அவரிடம் மனு அளித்தனர்.
ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டு கணினி முறையில் பணம் பரிவர்த்தனை நடைபெறுகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை அமைத்தல், தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட பணிகள் செய்யும்போது தாமதம் ஏற்படுகிறது.
எனவே பழைய முறைப்படி ஊராட்சி தலைவர்களுக்கு காசோலையை கையாளும் அதிகாரத்தை தரக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு, செய்தியாளர்களிடம் கூறும்போது....... ஆன்லைன் பரிவர்த்தனை முறையானது மத்திய அரசு கொண்டு வந்த திட்டமாகும். எனவே அதனை மாற்ற இயலாது. அதேசமயம் ஆன்லைன் பரிவர்த்தனையில் சில இடங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கிராம ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அது விரைவில் சரி செய்யப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் இது குறித்து திருச்சி மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தர்மன் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது....... ஆன்லைன் பண பரிவர்த்தனையால் பல பணிகள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் பணியை விரைவாக செய்ய பழைய முறைப்படி காசோலையில் கிராம ஊராட்சி தலைவர்கள் கையொப்பமிடும் அதிகாரத்தை வழங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் விரைவாக கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் விரைவில் நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment