Sunday, February 23, 2020
திருச்சி
என்.ஆர்.சி குறித்து பிரதமரும்,உள்துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகள் கூறுவது இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தோல் .திருமாவளவன் பேட்டி
திருச்சியில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் என்.ஆர்.சி,என்.பி.ஆர் ஆகியவற்றை செயல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் வி.சி.க சார்பில் தேசம் காப்போம் பேரணி இன்று திருச்சியில் நடைபெற உள்ளது.
இந்த சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் எட்டு கோடி பேர் நாடற்றவர்களாக மாறும் நிலை உருவாகும்.26558 தடுப்பு முகாம்கள் கட்ட இருக்கிறார்கள்.இதற்கு 12 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய நேரிடும் என கணகிடப்பட்டுள்ளது.இது இந்தியாவின் பொருளாதராத்தை பாதிக்கும்.
மத்திய மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் நாடு இருள்மயமாகி விடும்.
இந்த சட்டத்தால் முஸ்லீம்கள் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள் என நம்பினால் அது மிகப்பெரிய மூட நம்பிக்கை.
என்.ஆர்.சி குறித்து பிரதமரும்,உள்துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகள் கூறுவது இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம்.
நாட்டு மக்களை திசை திருப்பி ஏமாற்றும் முயற்சியில் அவர்கள்
ஈடுபட கூடாது.பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் நடவடிக்கை.
அரசியலமைப்பு சட்டத்தை வலுவிழக்க செய்து அதை சிதைப்பது சங்பரிவாரிகளின் நீண்ட நாள் கனவு.
முதலமைச்சர் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்த விரும்புகிறார்.ஆளும் பா.ஜ.க வின் பாவசெயலுக்கு முட்டு கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.கூட்டணி தர்மத்திற்காக பா.ஜ.க செய்யும் பாவ செயலுக்கு அ.தி.மு.க,பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் துணை போகிறது.
ஒ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக வி.சி.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
தாழ்த்தப்பட்ட சமூகங்களை நீதிபதிகளாக நியமித்தது குறித்து ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு வருத்தமும்,அதிர்ச்சியும்,வலியையும்அளிக்கிறது. அவர் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதால் மேலும் அது குறித்து பேச தேவையில்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment