Sunday, February 23, 2020

On Sunday, February 23, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி
                   

என்.ஆர்.சி குறித்து பிரதமரும்,உள்துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகள் கூறுவது இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் - விடுதலை சிறுத்தைகள்  கட்சித் தலைவர்  எழுச்சித்தமிழர்  சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தோல் .திருமாவளவன் பேட்டி


திருச்சியில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் என்.ஆர்.சி,என்.பி.ஆர் ஆகியவற்றை செயல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் வி.சி.க சார்பில் தேசம் காப்போம் பேரணி இன்று திருச்சியில் நடைபெற உள்ளது.

இந்த சட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் எட்டு கோடி பேர் நாடற்றவர்களாக மாறும் நிலை உருவாகும்.26558 தடுப்பு முகாம்கள் கட்ட இருக்கிறார்கள்.இதற்கு 12 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய நேரிடும் என கணகிடப்பட்டுள்ளது.இது இந்தியாவின் பொருளாதராத்தை பாதிக்கும்.
மத்திய மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் நாடு இருள்மயமாகி விடும்.

இந்த சட்டத்தால் முஸ்லீம்கள் மட்டும் தான் பாதிக்கப்படுவார்கள் என நம்பினால் அது மிகப்பெரிய மூட நம்பிக்கை.

என்.ஆர்.சி குறித்து பிரதமரும்,உள்துறை அமைச்சரும் மாறுபட்ட கருத்துகள் கூறுவது இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம்.
நாட்டு மக்களை திசை திருப்பி ஏமாற்றும் முயற்சியில் அவர்கள் 
ஈடுபட கூடாது.பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் நடவடிக்கை.

அரசியலமைப்பு சட்டத்தை வலுவிழக்க செய்து அதை சிதைப்பது சங்பரிவாரிகளின் நீண்ட நாள் கனவு.

முதலமைச்சர் தன் நிலைப்பாட்டை நியாயப்படுத்த விரும்புகிறார்.ஆளும் பா.ஜ.க வின் பாவசெயலுக்கு முட்டு கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.கூட்டணி தர்மத்திற்காக பா.ஜ.க செய்யும் பாவ செயலுக்கு அ.தி.மு.க,பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் துணை போகிறது.

ஒ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக வி.சி.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

தாழ்த்தப்பட்ட சமூகங்களை நீதிபதிகளாக நியமித்தது குறித்து ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு வருத்தமும்,அதிர்ச்சியும்,வலியையும்அளிக்கிறது. அவர் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதால் மேலும் அது குறித்து பேச தேவையில்லை என்றார்.

0 comments: