Friday, March 27, 2020

On Friday, March 27, 2020 by Tamilnewstv in    
திருச்சி மார்ச் 27
தன்வந்திரி யாகம் என்றால் கொடிய நோய்களில் இருந்து விடுபடவும் நோய்களினால் தாக்கம் ஏற்படாமல் இருக்கவும் நடத்தும் யாகம் ஆகும் தற்பொழுது கொடிய வைரஸ் காரணத்தால் நோய் ஏற்பட்டு வருகிறது மக்கள் கொடிய நோய்த் தாக்குதல் பாதிப்படையாமல் இருக்கவும் நோய்த் தாக்குதலில் இருந்து விடுபடவும் சிறப்பு யாகம் நடைபெற்றது


திருச்சி ஸ்ரீரங்கத்தில்
கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை
தன்வந்திரியாகம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை காக்கவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் தன்வந்திரியாகம் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடத்தப்பட்டது. இதற்க்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து இருந்தார். இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தன்வந்த்ரி யாகம் பற்றி தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் விளக்கம் அளித்தார்


0 comments: