Sunday, March 15, 2020
On Sunday, March 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் பைஜி தலைமை வகித்தார்.
தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத், மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளரிடம் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 48 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது என்பிஆர்.க்கு எவ்வித ஆவணமும் வழங்க வேண்டியதில்லை. 'டி' பிரிவு குடிமக்கள் என்று கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். எனினும் என்பிஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிராக நடைபெறும் ஒத்துழையாமை இயக்கத்தில் எஸ்டிபிஐ கட்சி பங்கேற்கும். தமிழக அரசு நிச்சயம் தீர்மானம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. என் ஆர் பி க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் தேசிய குடியுரிமை சட்டத்திதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் தூண்டுதலின் பேரில்தான் டெல்லியில் கலவரம் நடைபெற்றது. இது முற்றிலும் இனக்கலவரம் தான். இதில் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு எவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்டதோ அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா பாதுகாப்பு வேளாண் மண்டலத்தை வரவேற்கிறோம். அதேசமயம் இதில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்து முழுமையான ஒரு சட்டமாக கொண்டுவர வேண்டும். மேலும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர பகுதிகளுக்கான நகராட்சி, மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றார்.
அப்போது செய்தியாளரிடம் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 48 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது என்பிஆர்.க்கு எவ்வித ஆவணமும் வழங்க வேண்டியதில்லை. 'டி' பிரிவு குடிமக்கள் என்று கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். எனினும் என்பிஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிராக நடைபெறும் ஒத்துழையாமை இயக்கத்தில் எஸ்டிபிஐ கட்சி பங்கேற்கும். தமிழக அரசு நிச்சயம் தீர்மானம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. என் ஆர் பி க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் தேசிய குடியுரிமை சட்டத்திதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் தூண்டுதலின் பேரில்தான் டெல்லியில் கலவரம் நடைபெற்றது. இது முற்றிலும் இனக்கலவரம் தான். இதில் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு எவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்டதோ அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா பாதுகாப்பு வேளாண் மண்டலத்தை வரவேற்கிறோம். அதேசமயம் இதில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்து முழுமையான ஒரு சட்டமாக கொண்டுவர வேண்டும். மேலும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர பகுதிகளுக்கான நகராட்சி, மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment