Tuesday, May 19, 2020
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறை அருகே
மழைநீர் வயல்களில் தேங்கியதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் பெய்த மழையால் வயல்களிலும் மழைநீர் புகுந்தது.
இதனால் வையம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் முற்றிலுமாக சாய்ந்து விட்டது.
இதனால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரில் நெற்கதிர்கள் மூழ்கி இருப்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு கடும் வறட்சியிலும் விவசாயம் செய்து வைத்திருந்த விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகள் நலன்காத்திட உரிய உதவி செய்திட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...


0 comments:
Post a Comment