Tuesday, May 19, 2020

On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
மழைநீர் வயல்களில் தேங்கியதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் பெய்த மழையால் வயல்களிலும் மழைநீர் புகுந்தது.
இதனால் வையம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் முற்றிலுமாக சாய்ந்து விட்டது.
இதனால் வயல்களில் தேங்கியுள்ள மழைநீரில் நெற்கதிர்கள் மூழ்கி இருப்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல்மணிகள் மீண்டும் முளைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு கடும் வறட்சியிலும் விவசாயம் செய்து வைத்திருந்த விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர். அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகள் நலன்காத்திட உரிய உதவி செய்திட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: