Tuesday, May 19, 2020
On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 23 மாவட்டங்களை சேர்ந்த 558 நபர்கள் டெல்லியில் இருந்து
சிறப்பு ரயில் மூலம் திருச்சிராப்பள்ளி ஜங்சன் ரயில்வே நிலையத்திற்கு
வருகைபுரிந்தனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்.*
டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்கள் 292 நபர்கலும் இதர 266 நபர்களும் ஆக
மொத்தம் 558 நபர்கள் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் திருச்சிராப்பள்ளி இரயில்வே
ஜங்சன் வந்து சேர்ந்தனர்.
266 நபர்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த 64 நபர்கள் 202 நபர்கள் இதர
மாவட்டங்களை சேர்நதவர்கள்
புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் திண்டுக்கல் மதுரை தேனி கரூர் ஈரோடு
திருப்பூர் கோயம்புத்தூர் நீலகிரி சேலம் நாமக்கல் தஞ்சாவூர் திருவாரூர் நாகபட்டினம்
அரியலூர் பெரம்பலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை கடலூர் ஆகிய 22
மாவட்டத்தை சேர்ந்த 202 நபர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக்கழகம் 5 சிறப்பு பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான
பரிசோதனை செய்யப்படுவார்கள்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 64 நபர்களையும் தமிழ்நாடு அரசு
போக்குவரத்துக்கழகத்தின் 2 சிறப்பு பேருந்துகள் மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரிசோதனை செய்து தனிமை படுத்துவதற்காக சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரிக்கு
அழைத்துச்செல்லப்பட்டனர். இவர்கள் 14 நாட்கள் தனிமை படுத்தி கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர்.
மீதமுள்ள 292 நபர்கள் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்றவர்கள். இவர்களை
திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்சனில் இருந்து தனியார் கல்லூரி பேருந்துகள் மூலம் காஜாமலை
பகுதியில் உள்ள அரபிக்கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களும் 14
நாட்கள் தனிமை படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ராஜ்மோகன்
திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் முசிறி வருவாய் கோட்டாட்சியர்
(பொ)
பழனிதேவி காவல் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மணிகண்டன்
அலுவலக மேலாளர் பொது சத்தியமூர்த்தி திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர்
மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment