Thursday, June 03, 2021
திருச்சி
"ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட்" சார்பில் ஏழைகளுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக மக்களை தாக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வற்ற ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது
அதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடி வாழ்ந்து வருகின்றனர். அப்படி கஷ்டப்படும் 100 மேற்பட்ட ஏழை எளிய நபர்களுக்கு திருச்சியைச் சேர்ந்த ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் சார்பில் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் 120 பேருக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், பிஸ்கட், சேமியா அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் தினேஷ்பாபு, காவல்துறை உதவி ஆய்வாளர் மதியழகன், தர்கா ஜமாத் தலைவர் ஜாகீர் உசேன், என்டிஎஃப் மாநிலச் செயலாளர் ஆல்பா நசீர், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் இலியாஸ், ஆசிரியர் காஜாமைதீன், எஸ்டிபிஐ முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரைட் திங்கர்ஸ் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் இப்ராஹிம், தலைவர் முகமது ரசூல், பொருளாளர் சாகுல் ஹமீது, அறங்காவலர்கள் சையது முஸ்தபா, அப்துல்லா, பாஸ்கர், ஜோ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நலிவடைந்த பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment