Thursday, December 31, 2015
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் கொம்மடிக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று எஸ்தர் ஜெனிட்டா தனது கணவருடன் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். வங்கியில் ரூ.4 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கணவருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பண்ணம்பாறை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து கொண்டிருந்த 2 மர்மநபர்கள் திடீரென ஜெபராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்து கணவர்– மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு எஸ்தர் ஜெனிட்டாவிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை தாக்கி பணம் பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நகைபறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment