Thursday, December 31, 2015

On Thursday, December 31, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் கொம்மடிக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று எஸ்தர் ஜெனிட்டா தனது கணவருடன் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். வங்கியில் ரூ.4 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கணவருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பண்ணம்பாறை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து கொண்டிருந்த 2 மர்மநபர்கள் திடீரென ஜெபராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்து கணவர்– மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு எஸ்தர் ஜெனிட்டாவிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை தாக்கி பணம் பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நகைபறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 comments: