Thursday, December 31, 2015
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் கொம்மடிக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று எஸ்தர் ஜெனிட்டா தனது கணவருடன் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். வங்கியில் ரூ.4 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கணவருடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பண்ணம்பாறை விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து கொண்டிருந்த 2 மர்மநபர்கள் திடீரென ஜெபராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்து கணவர்– மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு எஸ்தர் ஜெனிட்டாவிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை தாக்கி பணம் பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நகைபறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர். அரிவாள் வெட்டு சென்னை முகப்பேர் ம...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
0 comments:
Post a Comment