Saturday, August 21, 2021
செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம் - சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைச்சர் பேட்டி.
திருச்சிமாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் விழா இன்று ஆகஸ்ட் 21 நடைபெற்றது இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி நூலகர்களையும், நன்கொடையாளர்களையும் சிறப்பித்து விழாப் பேருரையாற்றினார்.
செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் ...
தற்போது வரை செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் - அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாஸ்க் அணிவது,கிருமி நாசினி பயன்படுத்துவது,குழந்தைகளை எப்படி இடைவேளை விட்டு அமர வைக்க வேண்டும் போன்ற முன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.
பொது சுகாதர துறையிடமும் ஆலோசனைகள் கேட்டுள்ளோம்,அவர்கள் கூடுதலாக ஆலோசனைகள் வழங்கினார்கள் என்றால் அதையும் நாங்கள் கடைபிடிக்க உள்ளோம்.
9,10,11,12 மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.
ஆசிரியர்கள் எவ்வளவு பேர் தடுப்பூசிகள் செலுத்தி உள்ளனர் என்ற விபரங்களை பெற்று வருகிறோம்.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
150 மாணவர்கள் அமர்ந்து படித்து வந்த வகுப்பறையில் தற்போது 350 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற செய்தி எல்லாம் வந்து உள்ளது எனவே மாணவர்கள் சேர்க்கைக்கு தகுந்தார்போல் பள்ளியின் கட்டமைப்பை கண்டிப்பாக மேம்படுத்துவோம் என கூறினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment