Wednesday, March 11, 2015
On Wednesday, March 11, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
பொன்மலை ரயில்வே காலணியில் நீண்ட காலமாக சாலை மோசமடைந்த காரணத்தால் தற்சமயம் தார் சாலை போடும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பெரிதும் பயன்படுத்தும் சாலையான் ஆர்மெரிகேட் (டிஓ)சு10சையப்பர் ஆலயம் செல்லும் சாலை மற்றும் ஹோலிகிராஸ் காண்வெண்ட் மடத்திற்கு செல்லும் சாலையை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் ஆகவே டைபி மற்றும் கிறிஸ்துவ மக்கள் கட்சி சார்பாக சாலையை உடனே போட கோரி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
On Wednesday, March 11, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தோழமை போற்றுதும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சித் துறையினர் பங்கேற்கும் ஓர் இனிய சந்திப்பு பூமாலை வணிக வளாகம் பாரதிதாசன் சாலையில் நடைபெற்றது.
பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றிய அனைத்து நண்பர்களும் பங்கேற்றனர்Tuesday, March 10, 2015
உடுமலைபேட்டையில் சனியன்று இரவு நடத்தப்பட்ட கலை இரவு நிகழ்ச்சியில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் மீது காவல் துறை உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) வலியுறுத்தியுள்ளது.
தமுஎகச திருப்பூர் மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமையில் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் எஸ்.ஏ.பெருமாள், மாவட்டச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திருப்பூரில் மார்ச் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள தமுஎகசவின் 13வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், மாநாட்டு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர் ஐ.மாயாண்டி பாரதி, திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உடுமலைபேட்டை கிளை சார்பில் சனியன்று குட்டை மைதானத்தில் மாபெரும் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, கையில் காவிக் கொடிகளை ஏந்திக் கொண்டு, குடிபோதையில் 10 பேர் கொண்ட கும்பல் புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளது. மோடி, ராமர், கோட்சே குறித்து பேசக் கூடாது என்று மிரட்டல் விடுத்து, இருக்கைகளை தூக்கி வீசியுள்ளனர். கலை இரவில் பங்கேற்ற மக்கள் இவர்களது அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவுடன் தப்பியோடிய கும்பல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறது.
காவல் துறையிடம் முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட்ட கலை இரவு நிகழ்ச்சியில் ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையிடம் தமுஎகச உள்ளிட்ட கலை இரவில் பங்கேற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் உடுமலை காவல் துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்யாமல், கலை இரவு நிகழச்சியை முடித்துக் கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளனர். 300க்கும் மேற்பட்டோரின் முற்றுகை போராட்டத்துக்குப் பிறகு கலை இரவு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக, தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன், புதுகை துரை குணா ஆகியோர் மீது வலதுசாரி மதவெறி, சாதிவெறி சக்திகள் தாக்குதல், மிரட்டல் விடுத்துவரும் பின்னணியில் உடுமலையில் திட்டமிட்டே மதவெறியர்கள் இந்த சீர்குலைவு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. எனவே இந்த சம்பவத்திற்கு தமுஎசக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
அதேசமயம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரான மதவெறி சக்திகளின் சீர்குலைவு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல் துறை, மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தவிர்ப்பதுடன், பாதிக்கப்படுவோர் மீதே நடவடிக்கை எடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்க எடுக்க வேண்டும் என்று தமுஎகச திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பூர் அருகில் உள்ள வஞ்சிப்பாளையம், சௌடேஸ்வரி நகரில் உள்ள விசைத்தறி உரிமையாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் இன்று காலையில் அமர்ந்து இருந்த இந்த பறவையை பார்த்து தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துள்ளார். இந்த பறவையின் தோற்றம் கழுகைபோல் உள்ளது. முகம் ஆந்தையை போல் உள்ளது. மூக்கு கால்கள் கிளியை போல் உள்ளது. இறக்கையும்,உடலும் மென்மையாக உள்ளன.உடம்பில் கூடிய செம்பிகலர் கலந்து காணப்படுகிறது. இந்த அதிசயப்பரைவையை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இந்த பறவை குறித்து ராதாகிருஷ்ணன் தந்தை வையாபுரியப்பான் கூறும்போது இந்த பறவை முயல் அடிச்சான் பறவை எனக்கூற கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
திருச்சி
தனியார் கல்லு{ரியான தேசியக்கல்லூரி
கருமண்டபத்தில் உள்ளது அதில்
கல்வி பயிலும் மாணவர்கள் தாக்கபட்டதை
கண்டித்தும் மாணவர்களின் மீது அடக்குமுறை செய்த
காவல்துறையை கண்டித்தும் மாணவர்களின் மீது காவல்துறையை ஏவிவிட்ட
கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் ஜிஒ 92 அமல்படுத்தகோரியும் சட்டக்;கல்லூரி மாணவர்கள் போரட்டம்
சட்டக்கல்லூhயிpல் நடத்தினர்.
இந்நிலையில் இன்று தேசிய கல்லூரி
மாணவர்களுக்காக புதியதமிழகம் கட்சி சார்பாக மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் கல்லூரி
முதல்வரை கைது செய்யுமாறும் வழியுறுத்தி
போரட்டம் நடைபெற்றது.
On Tuesday, March 10, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பிடிஐ நிறுவனம் மற்றும் சுய உதவிக்குழுக்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...




