Tuesday, July 22, 2014
உடுமலை, 22 : பிரதான கால்வாய் பாசனம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை கண்டித்து மடத்துக்குளத்தில் நாளை நடைபெற உள்ள அனைத்து கட்சி போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பெறப்படும் நீரைக்கொண்டு திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆற்று வழியாகவும், ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழை போதிய அளவு பெய்யாததாலும், அடிக்கடி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும் பிரதான கால்வாய் பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அணையில் ஓரளவு தண்ணீர் இருப்பதால் தென்னைகளை காக்கவும், கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்கவும் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி மடத்துக்குளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துசாமியிடம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அந்த மனு கிடப்பில் போடப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து மடத்துக்குளம் நால்ரோட்டில் நாளை (23ம் தேதி) போராட்டம் நடைபெற உள்ளதாக அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் தரவு தெரிவித்துள்ளன.
இதில் விவசாயிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அனைத்து கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment